சனி, 4 ஏப்ரல், 2009

தமிழ்த் தாய்க்கு வணக்கம்


தமிழ்த் தாய்க்கு வணக்கம்
தென்மலை பிறந்து வையம்
தேரா விடமெலாம் பரந்து
என்றும் இளங்கன்னி யெனப் பெயர் கொண்டு
குன்றாடும் குமரன் திருநாட்டில்
மன்றம் கொண்ட மலைமகளே!!
வென்றாடும் வேங்கைய ரெல்லாம்
கன்றாகினர் உன்தனைக் கொண்டாடிடவே!!
மதியிலாச் சிறியேன் நின்னைக்
கதியென வந்து நின்றேன்
காத்தருள்வாய் தமிழ்மகளே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக